தமிழகத்தில் முதல்முறையாக, கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் புதுக்கோட்டையில் திறந்துவைக்கப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் தமிழ்நாடு சிறைத் துறை இணைந்து, பெட்ரோல் பங்க் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிவுற்று, இன்று பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது.
வல்லாஸ் ஜெயன்ட் என்ற வகைத் தேனீ, உலகிலேயே அளவில் மிகப்பெரியது. கடைசியாக, 1981-ம் ஆண்டு பார்க்கப்பட்டது. அதன்பின், இதுவரை அந்த இனமே அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் நினைத்திருந்தனர்.தற்போது அந்த இனத்தைச் சேர்ந்த பெண் தேனீயை இந்தோனேசியாவின் ஒரு தீவில், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
''காஷ்மீரிகள் வேண்டாம் எனப் புறக்கணிக்கும் மேகாலயா ஆளுநரையும், மற்றவர்களையும் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட வல்லபபாய் படேலின் சிலை பார்த்துக்கொண்டிருக்கிறது'' மனிதவள அமைச்சகத்தின் பார்வையில் காஷ்மீரி மாணவர்கள், மனிதர்கள் இல்லையா?” எனக் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி களம் சூடுபிடித்திருக்கும் வேளையில்., அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் அதிருப்தி அடைந்த மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் அன்புமணியை எதிர்த்து, காடுவெட்டி குருவின் தாயார் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது.
தொடர் குடும்ப பிரச்னை காரணமாக தேனி கலெக்டரிடம் புகார் தெரிவிப்பதற்காக, தனது மகளுடன் இன்று கலெக்டர் அலுவலகம் வந்த முத்துமாரி என்ற பெண், புகார் மனுவுடன் காத்திருந்துள்ளார். அப்போது திடீரென தான் கொண்டுவந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் முத்துமாரியை மீட்டனர்.
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு வீரர்கள் 2 பேருக்கு இந்திய அரசு விசா மறுத்ததற்கு ஒலிம்பிக் கமிட்டி இந்தியா மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய ஒலிம்பிக் கமிட்டியுடன் எதிர்காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் செய்துள்ள்ளது. இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கோரியிருந்த மனுக்களையும் ரத்து செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால், 120 ஜோடிகள் கிடைக்காததால் ஏற்கெனவே திருமணமாகிய சிலரையும் இங்கே அழைத்து வந்து திருமணம் செய்து வைத்ததுதான் ஹைலைட்.
`எந்தக் கட்சியுடனும் எங்களை ஒப்பிடவில்லை; தே.மு.தி.க-வின் பலம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்’ என்று அக்கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். கூட்டணிகுறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக 1906-ல் பார்க்கப்பட்டு அழிந்ததாகக் கருதப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று திடீரெனத் தற்போது தோன்றிய அதிசயம் ஈகுவடார்நாட்டில் நடந்துள்ளது. இந்த நாட்டைச் சேர்ந்த கலபோகஸ் தீவு பெரிய ஆமைகள் பலவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது. `Fernandina Giant Tortoise' இனத்தைச் சேர்ந்த பெண் ஆமை ஒன்று அந்தத் தீவில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரபல தெலுங்குப் பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா நுரையீரல் கோளாறு காரணமாக இன்று இயற்கை எய்தினார். 1982-முதல் தெலுங்கு சினிமாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் இவர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் கோடி ராமகிருஷ்ணா.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 13.2.2019 - 31.8.2020 வரை உள்ள காலகட்டத்தில் ராகு கேது சஞ்சாரம் வித்தியாசமான பலன்களைத் தரப்போகிறது. உங்கள் ராசிக்கு 9 - வீட்டிலிருந்து கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்ததுடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்போது 8 - ம் வீட்டில் சென்று மறைகிறார்.
'அ.தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்களெல்லாம் மண்ணைப்போன்று இருப்பவர்கள்' என்று முன்பு ராமதாஸ் விமர்சித்ததையும், இப்போது அவர்களோடே கூட்டணி வைத்திருப்பதைப் பற்றியும் கேட்கிறீர்கள். ராமதாஸ் நினைத்தால், மண்ணையும் பிள்ளையாராக மாற்றுவார்" என பா.ம.க மாநிலப் பொருளாளர் கவிஞர் திலகபாமா பேசியுள்ளார்.
தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு உயரிய விருதுகளில் ஒன்றான சியோல் அமைதி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை மூலம் உலக அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் வித்திட்டதாக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இன்று அதன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.
உள்ளூர் மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரியில் நடைபெற்ற ஆட்டத்தில், மிசோரம் மற்றும் மத்தியப்பிரதேசம் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மிமிசோரம் அணி 13.5 ஓவர்களில் 9 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் 9 வீராங்கனைகள் ரன் கணக்கைத் தொடங்காமல் வெளியேறினர். மத்தியப்பிரதேச அணி, ஒரே ஓவரில் வெற்றிபெற்றது.
'உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்' என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.
சென்னை மருத்துவக் கல்லூரி ஆண்கள் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருப்பதை கண்ட மாணவர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் விடுதி முன் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார் மு.க.ஸ்டாலின். சந்திப்பின் போது அரசியல் குறித்து பேசப்பட்டதா. என எழுப்பப்பட்ட கேள்விக்கு, `அரசியல் பேசுவதற்காக நான் வரவில்லை. மனிதாபிமான அடிப்படையில் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன்.' என்றார் ஸ்டாலின்.
தி.மு.க. கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற உள்ளது. இந்தநிலையில் விசிக தரப்பிலிருந்து மூன்று தொகுதிகள் கேட்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விசிக சிதம்பரத்தில் களமிறங்க உள்ளது.
சர்வதேச ஆசிரியர் விருதுப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வரூப் ராவல் முதல் பத்து இடங்களில் உள்ளார். இந்த ஸ்வரூப் ராவல் ஆசிரியர் என்பதைத் தாண்டி நடிகையும்கூட. ஸ்வரூப் ராவல் 1979-ம் ஆண்டு நடந்த `மிஸ் இந்தியா' போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வென்றவர்.
ராஜேஷ்வரி, பா.ம.க -வின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் வெளியேறினார். `மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல் என்னுடைய இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இன்று அவரை நேரில் சந்திக்க உள்ளேன். மற்றபடி கட்சியில் சேருவது பற்றி எல்லாம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை’ என்றார்.
ரஜினி விஜயகாந்தை சந்திக்க என்ன காரணம் என்றும் இந்த சந்திப்பின் பின்னணி குறித்தும் ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது அண்மையில் ரஜினியும் திருநாவுக்கரசரும் பேசிக்கொண்டபோது, விஜய்காந்தின் உடல்நிலைக் குறித்து திருநாவுக்கரசர் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே ரஜினி விஜயகாந்தை சந்தித்திருக்கிறார்.
பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அற்புதம்மாள், ``பாசமும் அன்பும்தான் எங்கள் குடும்பச் சொத்து. 28 ஆண்டு போராட்டத்தில் இழந்த மகிழ்ச்சி தற்காலிகமாக கிடைத்த நேரம் தான் அந்தப் புகைப்படத்தில் இருப்பது. அறிவு எட்டாம் வகுப்பு படிக்கும்போது எடுத்த குடும்ப புகைப்படம் அது. நிரந்தர நிம்மதி ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் நிற்கிறது'' என்றார்.
பா.ம.க வட்டாரங்களில் தி.மு.க உடன் கூட்டணி அமையாமல் போனது குறித்துப் பேசியவர்கள், `` பா.ம.க, தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தன. அந்த வாய்ப்புகளை நழுவ விட்டவர் ஸ்டாலின்தான். இதுவே கருணாநிதி இருந்திருந்தால் இப்படி நடந்துகொண்டிருந்திருக்கமாட்டார். ஸ்டாலினின் நடவடிக்கைகள்தான் காரணம் என்கின்றனர்.