நாடு முழுவதும் இன்று முதல் 3ம்கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 25 வருடமாக சிறிய அளவில் நகைக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்த ஹுமுக்சந்த் சோனி என்பவர் தற்போது அதனை காய்கறி கடையாக மாற்றியுள்ளார். தன்னிடம் உணவுக்கு கூட பணம் இல்லாத காரணத்தால் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.