`தமிழக முதல்வர், துணை முதல்வரிடம் பேசி திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க முயற்சி எடுப்போம்’ என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர்கள் மதுரையை இரண்டாவது தலைநகரம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் மற்றொரு அமைச்சர் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.