மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கஜல்புரா என்ற பகுதியில் உள்ள ஒரு 5 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு நேற்றிரவு 7 மணியளவில் இடிந்து விழுந்தது. 35 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். இருவர் உயிரிழந்த நிலையில் இன்னும் 18 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.